Sunday, November 11, 2012

பூனை கட்டப்பட்டிருக்கிறது

ஒரு ஜென் கதை:

ஒரு ஜென் துறவி நாள்தோறும் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார் . அப்பொழுது ஒரு பூனை குறுக்கும் , நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருந்தது. இதனால் அவரது  சீடர்களின் கவனம் சிதறியது. உடனே துறவி அந்த பூனையை உபதேசம் முடியும் வரை ஒரு தூணில் கயிறினால் கட்டி வைக்க சொன்னார்.
அது முதல் துறவி உபதேசம் தொடங்கும் முன் சீடர்கள் அந்த பூனையை கட்டி வைக்க தொடங்கினர். உபதேசமும் எந்த ஒரு தடங்கலும் இன்றி நடந்தது.

நாளடைவில் துறவி முக்தி அடைந்தார். அவருக்குப்பின் வேறு ஒரு துறவி உபதேசம் செய்து வந்தார். சிறிது நாளில் அந்த பூனை இறந்தது.

உடன் துறவி தன சீடர்களிடம் , நாளை உபதேசம் தொடங்கும்முன் ஒரு பூனையை தேடி கண்டுபிடித்து கட்டி வைக்கவும். ஏனெனில் உபதேசம் செய்யும் பொழுது ஒரு பூனையை தூணில் கையிற்றால் கட்டி வைப்பது நமது மடத்தின் கோட்பாடு என்றார்.

நாமும் சில பழக்க வழக்கங்களை , காரண காரியம் ஆராயாமல் வழி வழியாக வந்தவை என பின் பற்றி வருகிறோம். 

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டபோது, நீதித்துறை முழுக்க முழுக்க அவர்களிடத்தில் இருந்தது. அவர்களது முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவின் போதும், மிகுந்த வெப்பம் காரணமாக ஏப்ரல் - மே மாதங்களின் போதும் , அவர்கள் நீதி துறை சார்ந்த அலுவல்களுக்கு விடுமுறை அளித்து தமது நாட்டிற்கு சென்று  வந்தனர்

தற்போது நமது நாட்டில் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அனைவரும் அறிந்ததே. இருந்தும் மேற்கூறிய விடுமுறை என்னும் பூனையை நமது சுதந்திரத்திற்கு பிந்தைய அரசுகள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.

இதனால் நாட்டையே உலுக்கும் வழக்குகள் , விரைவாக முடிக்கப்படாமல் ,இழுத்தடிக்கப்படுகின்றன.   தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். அத்துடன், தண்டனை என்பது நிச்சயமில்லை எனும் போது , தவறுகளின் எண்ணிக்கையும் கூடும்.

நாட்டின் நலன் கருதி, தற்போதுள்ள அரசியல் கட்சிகளோ,ஊடகங்களோ,தன்னார்வ அமைப்புகளோ, இந்த பூனையை  கழற்றி விட முயற்சிக்குமா?

அன்பன்
K.T.S.Mugundan
9884087424