Saturday, April 5, 2014

உஸ்... அப்பா என்ன வெய்யில் ....

கத்திரி வெய்யில் துவங்குவதற்கு முன்பே வெப்பம் இப்படி சுட்டெரிக்கிறதே என அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றோம்.

வெளியில் அளவாக தலைகாட்டும் நமக்கே இப்படி என்றால், சுட்டெரிக்கும் வெய்யிலில் சூறாவளி பிரசாரம் செய்து வரும் நமது தலைவர்கள் இதனால் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என சற்று பார்ப்போமா ?

சொன்னதும் ( சொல்லப்போவதும் )

முதல்வர் , மற்றும் வைகை செல்வன் உட்பட கழக பேச்சாளர்கள் :

தமிழ்நாட்டில் மின்வெட்டா ? எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் .( நான் வந்த Helicopter fan கூட நன்றாக சுற்றியது . Current இல்லாவிட்டால் இவ்வாறு சுற்றுமா ?)


கலைஞர் :

Congress மதவாத பாதையில் இருந்து திரும்பினால் ஆதரவு அளிப்போம் . ( மன்மோகன் சிங் தாடி வளர்த்து,  டர்பன் அணிந்து தன்னை ஒரு சீக்கிய மதவாதியாக காண்பித்து கொண்டதால் congress உடன் கூட்டணி இல்லை )


விஜயகாந்த் :

விருதுநகர், விஜயகாந்த் , வைகோ, வெற்றி, வாழ்த்து - 5 V க்கள் ( நான் சொன்ன  5 "V" இவைதான் - வெட்டிபேச்சு , வீண் விவாதம் , வெறுப்பு, வயிற்று எரிச்சல் , விட்டால் போதும் )

பொன். இராதாகிருஷ்ணன் :

கூட்டணிக்குள் சிறு சல சலப்பு ஏற்படுவது இயற்கை தான் ( நான் சொன்ன கூட்டணி நான், இல.கணேசன், தமிழிசை , வானதி ஸ்ரீனிவாசன் )

Top and Super most : சிரிக்காமல் படிக்கவும் 

ஞான தேசிகன் மற்றும் நாராயணசாமி :

Congress அனைத்து  தொகுதிகளிலும்  வெற்றி பெறும்  ( நாங்கள் சொன்ன வெற்றி வேட்பாளர்களை தேடி கண்டுபிடித்து நிறுத்துவோம் என்பதுதான் - ஞான தேசிகன் , சொன்னபடி 15 நாட்களுக்குள் நிறுத்தி விட்டோம் - நாராயணசாமி )

வணக்கங்களுடன்
K.T.S.Mugundan