சென்ற வாரம் தமிழகமே அதிர்ச்சிக்குள்ளான இரு முக்கிய சம்பவங்கள் நடைபெற்றன. கோவையில் மனித போர்வையில் நடமாடிய இரு மிருகங்கள் அரங்கேற்றிய வெறி செயல்களும், சென்னையில் உறவினர் மகனை கடத்திய படிப்பாளிகளின் செயல்களும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் அனைத்து பெற்றோருக்கும் கவலை தர கூடியதாக இருந்தது.
2004 சுனாமியை போன்று இத்தகைய சம்பவங்கள் முதல் முறையாக நடைபெற்றால் அரசை குறை கூறி பயன் இல்லை.
ஆனால் இவை அன்றாட நிகழ்வுகளாக இருப்பதால் அரசின் மெத்தனம் நிதர்சனமாக தெரிகிறது.
எந்த ஒரு வருத்தமும், தார்மீக பொறுப்பும் இல்லாமல் , அன்றைய தினம் நடை பெற்ற ,அரசின் செலவில் கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு முக்கிய சாலைகளில் காணப்பெற்ற வரவேற்பு தட்டிகளை காணும்போது
மனிதாபிமானத்தை மறப்பது மாண்பு மிகு ஆவதற்கான தகுதியா என எண்ண தோன்றுகிறது.
நம்முடைய உடன் பிறந்தவர் வீட்டில் நடந்த துக்கம் போல் பாமர மக்கள் பாவிக்கும் பொழுது ஆள்பவர்கள் எந்த வித கூச்சமும் இல்லாமல் சுய தம்பட்டத்தில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அல்லவா இருக்கிறது?
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பது இதற்காகத்தானா ?
வருத்தங்களுடன்
முகுந்தன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment